×

டி. கல்லுப்பட்டி அருகே வங்கியில் 6 பவுன் நகை மாயம்

பேரையூர், ஜூன் 13: டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள புளியம்பட்டியை சேர்ந்தவர் ராஜபாண்டி (54). இவர் நேற்று தனது மனைவியின் 6 பவுன் தங்க செயினை டி.குண்ணத்தூரில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைப்பதற்காக மஞ்சள் பையில் போட்டு கொண்டு வந்துள்ளார். வங்கியில் அடகு வைக்கும் விண்ணப்பபாரத்தில் விபரம் எழுதி வங்கி அலுவலரிடம் கொடுத்து விட்டு நகையை எடுக்க பையை பார்த்த போது காணவில்லை. இதுகுறித்து ராஜபாண்டி அளித்த புகாரின் பேரில் டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post டி. கல்லுப்பட்டி அருகே வங்கியில் 6 பவுன் நகை மாயம் appeared first on Dinakaran.

Tags : TD ,Kallupatti ,BERAYUR ,T. Rajapandi ,Pliyampati ,Gallupatti ,
× RELATED கம்ப்யூட்டர், லேப்டாப் திருட்டு